உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை உடனடியாக நீக்கப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை முன்வைக்காவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க பிரித்தானிய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் வேண்டுகோளுக்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்திற்கு பதிலளிக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான விவாதமொன்று நாளைய தினம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, எவ்வித நிபந்தனைகளுமின்றி சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், யுத்த நிறுத்தத்தை அமுல் படுத்தவும் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் நேற்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.