கடந்த 33 வருடங்களில் முதல் தடவையாக இந்திய அணி நியூசிலாந்து மண்ணில், அந்த நாட்டு அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது.
10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இந்த வெற்றிக்கு இந்திய பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 6 விக்கட்டுக்களை கைப்பற்றியமை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஹர்பஜன் சிங்கின் சிறப்பான பந்து வீச்சும், சச்சின் டெண்டுல்கரின் அபாரமான சதமுமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறி அவர்களை இந்திய அணியின் தலைவரான மஹேந்திர டோனி பாராட்டினார்.