சென்னைப் பல்லாவரம் பேருந்து நிறுத்தத்தில் - தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் நடாத்திய பொதுக்கூட்டம்சென்னைப் பல்லாவரம் பேருந்து நிறுத்தத்தில் 29-03-2009 அன்று தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் தமிழீழ ஈழவிடுதலைக்கு தோள்கொடுப்போம்! இந்திய ஏகாதிபத்தியத்தின் விரிவாதிக்கத்தை எதிர்ப்போம்! என்ற தலைப்பில் பொத்துக்கூட்டம், கலைநிகழ்சி, ஓவியக்காட்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தோழர் தொன்றல் அரசு தலைமைதாங்கினார். தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பல்வேறு இயக்கத்தை சார்நதவர்களும் உறையாற்றினர். ஈழம் வெல்லும் நாடகம் நடைபெற்றது. இந்திய அரசின் தமிழின துரோகத்தை அம்பலபடுத்தி புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டது.
இந்திய துணைக்கண்டத்திலும் அதன் சுற்றிலும் நடைபெறும் தேசிய விடுதலைப்போராட்டத்தை பட்டியலிட்ட தோழர் தமிழ் மணி இந்தியா என்பது தேசிய ஒடுக்குமுறையில் உயிர்வாழும் ஒரு ஏகாதிபத்தியம் என்பதை விளக்கிகாட்டினார். 40,00 000 தமிழர்களை அழித்தொழிப்பதன் மூலம் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களை நிறந்தர அடிமையாக வைப்பதற்கு முயற்சிக்கிறது.
தமிழீழ மக்கள் விடுதலைப்பெற்றுவிட்டால் தனது தேசிய இன ஒடுக்குமுறை நலனுக்கு மாபெரும் ஆபத்து ஒருவாகிவிடும் என்பதற்காகவே இந்திய தரகுபார்ப்பனிய ஏகாதிபத்தியம் தமிழீழத்தில் இன அழிப்பு போரை மகிந்தாவுடன் இணைந்து நடத்துகிறது என்றும் ஆதார பூர்வமாக பேசினார்.
மேலும் காஷ்மீரை ஆக்கிரமித்துகொண்டு நடத்தும் கோரதாண்டவத்தையும், மணிப்பூரை ஆக்கிரமித்து மணிப்பூர் விடுதலைக்கு போராடிய போராளி மனோகரமாவை பலாத்காரம் செய்து இந்திய ராணுவம் கொலை செய்ததையும், பூட்டானை, சிக்கிம்மை விழுங்கியதையும் டக்கலஸ் தேவானந்தாவை வைத்து மலேசியாவை விழுங்க முயற்சித்ததையும் விரிவாக விளக்கி பேசினார்.