துன்பங்களைச் சுமந்தாலும் எதிரியிடம் செல்வதில் எந்தவிதமான நன்மையும் இருக்கப் போவதுமில்லை எதிரியிடம் செல்லும் எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையெனவும் இடம்பெயர்ந்து பொக்கணையில் வசிக்கும் கனகரத்தினம் குணம் என்ற வியாபாரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரி விக்கையில், சிங்களப் படைகள் தற்பொழுது எங்களைப் பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளியுள்ளன. அத்துடன் மக்களை மீட்கிறோம் என்று கூறிக்கொண்டு எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடத்தி 2500 இற்கும் மேற்பட்ட எமது மக்களைப் படுகொலை செய்துள்ளனர்.
இந் நிலையில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக நாங்கள் அனைவரும் போராடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. சிறிலங்காப் படைகளால் மல்லாவியில் இருந்து இடம் பெயர்ந்து மாங்குளம், வட்டக்கச்சி, விசுவமடு, உடையார் கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் என பல்வேறு இடங்களில் வாழ்ந்து தற்பொழுது பொக்கணையில் வசிக்கின்றேன்.
உண்மையில் எங்களுக்கு சாப்பிடுவதற்கு சரியான கஸ்ரமாகத்தான் இருக்கிறது. எனக்கு மூன்று பிள்ளைகள். ஆனாலும் இந்நிலையிலும் நாங்கள் எதிரியிடம் செல்வதில் எவ்வித பிரயோசனம் இல்லை என்பதை தெளிவானமுறையில் விளங்கிக்கொண்டுவிட்டேன். இதுபோல் அனைவரும் விளங்கிக்கொண்டு விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.paristamil.com/tamilnews/?p=33938