பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 டக்ளஸ் ‐ஆனந்த சங்கரிக்கிடையில் வாக்குவாதம்

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

டக்ளஸ் ‐ஆனந்த சங்கரிக்கிடையில் வாக்குவாதம் Empty
PostSubject: டக்ளஸ் ‐ஆனந்த சங்கரிக்கிடையில் வாக்குவாதம்   டக்ளஸ் ‐ஆனந்த சங்கரிக்கிடையில் வாக்குவாதம் EmptySat Mar 28, 2009 12:15 am

வடக்கு நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

யாழ்க் குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் அடக்குமுறை தொடர்பில் ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது அமைச்சர் தேவானந்தா குறுக்கீடு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

ஆனந்தசங்கரி, நீ வாயை மூடிக்கொள், நான் ஜனாதிபதியிடமே பேசுகிறேன் என டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கருணா டக்ளஸ் தேவானந்தாவை சமாதானப் படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

வன்னிச் சிவிலியன்களுக்கு போதியளவு உணவு விநியோகம் செய்யப்படுகின்றதா என ஆனந்தசங்கரி இதன் போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

80,000 மக்களுக்கு தேவையானளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களே அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.paristamil.com/tamilnews/?p=33905
Back to top Go down
 
டக்ளஸ் ‐ஆனந்த சங்கரிக்கிடையில் வாக்குவாதம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: