திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் சூரக்குடா என்னும் இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாம் ஒர் வதை முகாமாக செயற்படுவதாக முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் கடத்தப்படுபவர்கள் காணாமல் போகின்றவர்கள் மற்றும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்படுபவர்கள் எனப் பலதரப்பட்டோர் இவ்வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது. கடந்த சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் கிளிவெட்டி பகுதியில் வைத்து காணாமல் போன சம்பூரைச் சேர்ந்த தனபால் என்பவர் அண்மையில் இவ்வதை முகாமிலிருந்து தப்பிவந்து பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார்.
தற்போது அவர் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வதை முகாமில் நடைபெறும் பல சம்பவங்கள் குறித்து இவர் பொதுமக்களிடம் பல விபரங்களை தெரிவித்துள்ளார்