நேற்று(17/03/2009) பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள கொர எறிகணை ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த கோரக் காட்சியை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறோமா ? இனியும் நாம் மௌனமாக இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற வரலாறே பூண்டோடு அழிந்துவிடும்.
எமது சிறுவர்களும், பிரசவமாகாத பச்சிளம் குழந்தைகளையும் கூட விட்டுவைக்கவில்லை இந்த அரக்கர்கள். என்ன தவறு செய்தார்கள் இந்த பச்சிளம் பயிர்கள், மண்னில் பிறக்கும் முன்பு மாண்டுபோகும் நிலை எதற்கு. பத்து மாதம் சுமந்து பாதுகாத்தது, என்ன சிங்களவன் எறிகணைக்கு எமது செந்தளிர்களை பறிகொடுக்கவா ? ? ? ?
நன்றி :http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1237301362&archive=&start_from=&ucat=4&