சீனாவின் பெய்ஜின் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் பாதை கட்டுமானப் பணியின்போது இடிந்துவிழுந்ததில் 7 பேர் உயிரோடு மண்ணில் புதைந்ததாக சீன வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை 7 மணியளவில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் இவ்விபத்து நிகழ்ந்ததாக ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தற்போது விபத்து நிகழ்ந்த இப்பாதை 2012ல் திறக்கப்படும்போது உலகிலேயே இப்பாதை அதிவேக ரயில்பாதையாக இருக்கும் என சீனா தெரிவித்திருந்தது. ஒரு மணிநேரத்துக்கு 380 கிலோமீட்டர்(236 மைல்கள்) செல்லுமாறு இப்பாதையை சீனா வடிவமைத்துள்ளது. இதன்மூலம் 1,300 கிலோமீட்டர்களை நான்கு மணி நேரத்துக்குள் சென்றடைய முடியும்.
தற்போது சீனாவின் அரசியல் மற்றும் வர்த்தக தலைநகரங்களான பெய்ஜிங்குக்கும், ஷாங்காய்க்கும் இடையே பயணிக்க 10 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது.
விழிப்புணர்ச்சி மற்றும் அடிப்படை பாதுகாப்பை தீவிரமாக அமல்படுத்தாதது போன்றவைகளால் சீனாவில் இதுபோன்று பணியிடங்களில் விபத்துநிகழ்வது சாதாரணமாகியுள்ளது.