தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அனைத்துலக சமூகம் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் நோக்கி ‘வணங்கா மண்’ என்ற கப்பல் முதல் தடவையாக புறப்பட உள்ளது.
தாயகம் நோக்கிய இந்த ‘வணங்கா மண்’ என்ற கப்பல் பயணத்திற்கான முதல் நடவடிக்கையாக நேற்று சனிக்கிழமை முதல் பிரித்தானியாவில் பல பாகங்களிலும் உலர் உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் சேகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சேகரிப்பு நிலையங்களுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி பணியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், ஊடகவியளாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்டோரும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
அத்துடன் ‘வணங்கா மண்’ ஒருங்கினைப்புக் குழுவினருக்கு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பிரித்தானிய புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் ஆழிப்பேரலைக்குப் பின்னர் தற்போதைய தாயகம் நோக்கிய ‘வணங்கா மண்’ நடவடிக்கையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் பல பாகங்களிலும் உள்ள சேகரிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு:
ரூட்டிங் சிவயோகம் மண்டபம்: Mr Sadiq Khan MP, Under-Secretary of State in the Department for Communities and Local Government.
சிறீ செல்வ விநாயகர் ஆலயம்: Mr Toby Boutle Conservative PPA
ஈஸ்காம் நிகழ்வில்: Mr Neal Pearce By election candidate for (MP) for royal dock Newham Conservative party, Mrs Neal Pearce , Mr Sheik conservative councillor for Hackney, Mr Akram president conservative party East Ham and Mr Graham National Liberal spokes person
என்பில்ட் நாகபூசனி அம்மன் கோயில் நிகழ்வில்: ஆலய மதகுரு
ஆர்சிக்கு முன்னால்: Mr Lee Scott MP Ilford North and Clayhall Conservative Leader of the Council Alan Edward Weinberg.