திருகோணமலை, புல்மோட்டையில் மருத்துவ சேவையாற்றச் சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்கள் சிறியரக ஆயுதங்களை தம்முடன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவப் பணியாற்றச் சென்றவர்களின் இடுப்பு பகுதியில் சிறிய பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அநேகரிடம் இவ்வாறு பொருள்கள் இருப்பதாகவும் புல்மோட்டை பிரதேச வாசிகள் கூறியதாகப் பதிவு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புல்மோட்டை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க இவர்கள் வெளியே சென்றபோதே இவ்விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த மருத்துவக் குழுவிற்கு தலைமை தாங்குபவராக மருத்துவர் க.வசந்தகுமார் என்பவர் செயற்படுகின்றார்.
இதேவேளை, கனிப்பொருள் மணல் கூட்டத்தாபன வளவுக்குள் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு கடற்கரை ஓரத்தில் இருந்து 300 மீற்றர் நீளமான காபெட் ரக வீதி அமைக்கப்பட்டு வருகின்றது.