Subject: மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம் Wed Aug 25, 2010 4:07 pm
மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம்
செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இப் பிராகா நகரின் கிழக்கு திசையில் 70 கிலோமீற்றருக்கு அப்பால் செட்லெக் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மனித எலும்புக்கூடுகளிலான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலயத்தின் பெயர் ஒசாரே செட்லெக் தேவாலயம் ஆகும். இவ் அதிசய தேவாலயம் 40000 க்கு மேற்பட்டோரின் இறந்த உடல் எலும்புகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திடீரென பரவிய ப்ளெக்(plague) நோயினால் 30000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பாரிய உயிரிழப்புக்கு 'கறுப்பு இறப்பு' என பெயரிடப்பட்டது. இவ் இறப்பின் தொகை அதிகரித்தமையால் உடலங்களை பராகா நகரத்தில் செட்லெக் கிராமத்துக்கருகில் கொட்டப்பட்டன. அந்நாட்டு Schwarzenberg family தேங்கிக்கிடந்த உடலங்களில் இருந்து மண்டையோடுகளையும் எலும்புத்துண்டங்களையும் சேகரித்து, Frantisek Rint, wood carver ஆகிய சிறந்த கட்டட கலைஞர்கள் அடங்கிய குழுவை அமர்த்தி இத்தேவாலயத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.
அதன் பின் 15ம் நூற்றாண்டில் ஏற்பட்ட Hussite யுத்தத்தில் 10000 க்கும் மேற்பட்ட படைச்சிப்பாய்கள் இறந்தனர். இறந்த படைச்சிப்பாய்களின் உடலங்களில் இருந்து பெறப்பட்ட மண்டையோடுகள் எலும்புத் துண்டங்கள் ஆகியவற்றைச் சேர்த்து மிகப் பெரிய அளவில் மிகவும் நேர்த்தியான முறையில், ஆடம்பரமான வடிவத்தில் விளக்குகள், தூண்கள், முகப்புக்கள், நிலங்கள் என இவ் இறந்த எலும்புகளை வைத்து தேவாலயத்தை கட்டி முடித்தனர்.